
திருமண நிகழ்ச்சி என்பது மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்கள் பந்தலில் அமர்ந்தபடி திருமண சடங்குகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சில விருந்தினர்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தனர்.
View this post on Instagram
இது திருமணத்தில் கலந்து கொண்டவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில், மாடியின் இடது பக்கத்தில் நின்ற விருந்தினர்கள் திடீரென தரையில் விழும் காட்சி பதிவாகியுள்ளது. விழுந்தவர்களில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதிர்ஷ்டவசமாக, மணமக்கள் இருந்த கட்டிட பகுதி அருகே இந்த விபத்து நிகழவில்லை என்பதாலும், பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும் இது மிகப்பெரிய பேரழிவாக மாறியிருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இக்காட்சி “kumar_omkar_77” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதிலிருந்து, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “மணமக்கள் அருகே இல்லாதது அதிர்ஷ்டம்” எனக் கூறுபவர்கள் உள்ளனர்.
அதேசமயம் “இது போல நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் இல்லையென்று” பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் மூலம், எந்தவொரு விழாவாக இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.