கார் பயணத்தின் போது காரின் கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை கவனிப்பது மிகவும் அவசியம். ஆனால் சிலர் அதை கவனிக்காமல் இருப்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Arun journalist (@arun_journalist_)

அந்த காரின் கதவை சரியாக மூடாததால் காரில் இருந்த தாயும் அவரது மகளும் தவறி கீழே விழுந்தனர். இதனை பார்த்ததும் பின்னால் வந்த கார் ஓட்டுநர் பிரேக் போட்டு காரை நிறுத்தியதால் பெரிய காயம் ஏற்படாமல் முதலில் கீழே விழுந்த மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசங்கள் கார் பயணத்தின் போது விதிமுறையை சரியாக கடைபிடிக்க வேண்டும் கார் கதவு மூடப்பட்டிருக்கிறதா? அனைவரும் சீப் பெல்ட் அணிந்திருக்கிறார்களா? என்பதை பார்த்துவிட்டு தான் ஓட்டுனர் காரை இயக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.