மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தவகையில் அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பிற்கு பின், வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது.

இதனிடையே நேற்று பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ அருள், இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, பாமகவுக்கு 7 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.