
குஜராத் மாநிலத்தில் நரோதா பகுதியில் பிரிஜேஷ் சுதர் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமான நிலையில் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இவர் வீட்டில் இருந்து காணாமல் போய் கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன நிலையில் ஒரு ஆற்றின் அருகே அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதனை பிரிஜேஷ் குடும்பத்தினரை அடையாளம் காண காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் உடம்பை பார்த்து அவருடையது தான் என்று ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் அந்த உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த நிலையில் மறுநாள் அவர்கள் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அதாவது கடந்த புதன்கிழமை இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் திடீரெனப் பிரிஜேஷ் வந்துவிட்டார். புதைத்தவர் உயிரோடு வந்ததை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் முதலீடுகள் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்து போனதாகவும் தற்போது திரும்பி வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும் இதன் காரணமாக தற்போது புதைக்கப்பட்டது யாருடைய சடலம் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.