
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவருக்கு ராம்மிலன் என்ற கணவர் உள்ளார். இவர் சென்னையில் உள்ள அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக வேலைப் பார்த்து வருகிறார். ஆர்த்தி தேவி- ராம்மிலன் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் கல்லூரியில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இரண்டாவது மகன் அமன்(17) பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்த்தி தேவி தனது மகன் அமனுடன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவ நாளன்று காலையில் பள்ளி செல்ல எழுப்பிய ஆர்த்தி தேவியை அவரது மகன் அமன் தள்ளி விட்டதால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஆர்த்தி தேவி உயிரிழந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமன் தாயின் மரணத்தை மறைக்க முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆப் செய்து வீட்டில் வெளியில் இருந்து பூட்டி வைத்துவிட்டு தாயின் உடலோடு 4 நாட்கள் வீட்டில் உள்ளே இருந்துள்ளார்.மேலும் வீட்டில் துர்நாற்றம் வராமல் இருக்க ஊதுபத்தியை ஏற்றி வைத்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று அமர்ந்ததாக கூறப்படுகிறது. ஆர்த்தி தேவியின் கணவர் 4 நாட்கள் முயற்சி செய்தும் ஆர்த்தி தேவியின் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அருகில் உள்ள தனது உறவினர்கள் மூலம் பார்க்க சொல்லியுள்ளார்.
உறவினர் ஒரு பார்த்து விட்டு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாகவும்,வீடு பூட்டு போட்டுள்ளதாகவும் கூறியதால் சென்னையில் இருந்து வந்த ராம் மிலன் வீட்டுக்கு சென்று பார்த்த போது அவரது மனைவி உடல் அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்த்தி தேவியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கோயிலில் இருந்த அமனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அமன் தாயை கோபத்தில் தள்ளி விட்டதால் இறந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொண்டான். இன்று சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அமன் அனுப்பி வைக்கப்பட்டார்.