மும்பை சேர்ந்த தரம்பால் சிங் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு விடுத்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தாஜ் ஹோட்டலுக்கு விரைந்து அங்கு சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் தரம்பால் சிங் போலியாக வதந்தியை பரப்பியுள்ளது தெரியவந்தது. இதையடு்த்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்ததோடு தொடர்ந்து இவ்வாறு அவர் செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்