விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என பேசினார். அவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் ஆட்சியில் பங்கு வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என பேசியுள்ளார். ஆகவே தாங்கள் தற்பொழுது நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். உங்கள் தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது என தமிழக மக்களும் எதிர்பார்ப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.