
2008 ஆம் வருடம் ஐசிசி நடத்திய அண்டர்-19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அன்று தொடங்கி இன்று வரை சர்வதேச கிரிக்கெட் இதுவரை கண்டிராத தலைசிறந்த வீரராக விராட் கோலி உருவெடுத்துள்ளார். இருப்பினும் அண்டர் 19-ல் கோலியோடு விளையாடிய அனைவருமே இன்று கிரிக்கெட் துறையில் சாதனையாளர்கள் ஆகிவிடவில்லை. இருந்தாலும் விராட் கோலி தற்போது பதினெட்டாவது ஐபிஎல் தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இருக்கிறார். இந்த நிலையில் அண்டர் 19 தொடரில் இவரோடு விளையாடிய தன்மே ஸ்ரீவஸத்வா விரைவில் தொடங்க இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் அம்பயராக காமிரான்க் இருக்கிறார்.
இவர் வெளியான தகவல்களின்படி, தன்மே ஸ்ரீவஸத்வா தனது 35 வது வயதிலிருந்து அம்பயராக இருக்கிறார். 2008 ஆம் வருடம் நடந்த ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அதிக ஸ்கோர் அடித்த வீரராக இருந்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் அவர் விளையாடியிருந்தார். இந்நிலையில் அம்பயரிங் செய்வது குறித்து பேட்டியளித்த தன்மே ஸ்ரீவஸத்வா,” நான் தலைசிறந்த வீரராக இருந்ததை புரிந்து கொள்கிற ஒரு கட்டத்தில் ஐபிஎல் விளையாட முடியுமா? என்ற சூழல் எனக்கு உருவானது. அப்போதுதான் தொடர்ந்து வீரராக விளையாட வேண்டுமா அல்லது வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்சில் கவனம் செலுத்த வேண்டுமா? என்ற முடிவு செய்ய வேண்டிய நிலை எனக்கு உருவானது” என்று கூறியுள்ளார்.
A true player never leaves the field—just changes the game.
Wishing Tanmay Srivastava the best as he dons a new hat with the same passion!#UPCA #IPL #UP #PrideOfUP pic.twitter.com/wrRoW31OG2— UPCA (@UPCACricket) March 17, 2025