
பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ மல்லி 1300 ரூபாய்க்கும், அரளி 400 ரூபாய்க்கும் விற்பனையானது, சம்பங்கி 150 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 150 ரூபாய்க்கும், கனகாம்பரம் 400 ரூபாய் என விற்பனையானது. இது சில்லறை கடைகளில் இன்னும் அதிகமாகவே விற்பனையாகும்.