தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக ஜே.மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவு பிரிவு  டிஐஜியான மகேஷுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு காவல் பிரிவின் தலைமை கண்காணிப்பாளராக எஸ்.பி அருளரசுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவின் கோவை எஸ்.பி வி.சசிமோகனுக்கு மதுரை பிரிவு எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது