
தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுவதோடு சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படலாம்.
அதன் பிறகு இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.