பாரதியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து பாரதியாரின் நூல் தொகுப்பை வெளியிட்ட பிரதமர் மோடி கூறியதாவது, பாரதியார் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ் பெரும் கலைஞரும் சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்த நாளை இன்று நாடு கொண்டாடுகிறது. தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார். தமிழ்நாட்டின் கௌரவம் மகாகவி பாரதியார். பாரதியாருக்கு எனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.