தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி திருத்தம் செய்ய வந்தபோது யோகேஷ்வரன் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சின்னையன், யோகேஷ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.