
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினும் அறநிலையத்துறை அமைச்சரும் தடங்கள் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
திமுக தோல்வி பயத்தில் இருக்கும் நிலையில் விரைவில் ஆட்சி மாற்றம் வர இருப்பது உறுதி என்றார். அதன் பிறகு தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்றும் கூறினார். மத்திய அரசு கொடுக்கிற நிதியை 70% வரை பயன்படுத்திக்கொண்டு எல்லா திட்டங்களையும் மாநில அரசுதான் செய்தது போல் முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார்.
எல்லா கட்சியும் ஒரு அணியில் இணைந்தால் மட்டும் தான் திமுகவை அகற்ற முடியும் என்பது என்னுடைய கருத்து என்றார். மேலும் தமிழ்நாட்டில் அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி கூறும் நிலையில் பாஜகவினர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.