தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் எவ. வேலு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறித்து பேசிய அண்ணாமலை, தவறு செய்ததால் புகாரி அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. சோதனை குறித்து நான் பேசினால் நான் சொல்லி தான் சோதனை நடப்பதாக கூறுவார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் அதிக அளவில் ஊழல் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.