
தமிழ்நாடு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதியது. இதில் கோவை அணி முதலில் டாஸ் வென்ற நிலையில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 55 ரன்கள் எடுத்த நிலையில் இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணி அதிகபட்சமாக துஷார் 57 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் திருப்பூர் அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. மேலும் இதன் மூலம் திருப்பூரை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி பெற்றது.