
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் கார் ரேசர். இவர் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நடிகர் அஜித் எனக்கு அரசியலில் உடன்பாடு கிடையாது என்றும் சில நடிகர்கள் அரசியலில் வர ஆர்வம் காட்டலாம் அவர்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் தமிழ்நாடு அஜித்குமார் கழகம் என்ற பெயரில் அஜித் புகைப்படத்துடன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் அஜித் அரசியலுக்கு கட்சியை தொடங்குவார் என்ற விதத்திலும் கட்சிக்கு தமிழ்நாடு அஜித்குமார் கழகம் என்று பெயர் வைப்பார் என்ற விதத்திலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் சக நண்பர்கள் அரசியலில் இறங்கியுள்ளனர் என்றும் அவர் நடிகர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்ட நிலையில் தற்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வருவார் என்ற கோணத்தில் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். மேலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுக மற்றும் பாஜகவில் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுவதாக கூறப்படும் நிலையில் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.