
தமிழகத்தில் இன்று இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி சென்னை மற்றும் தூத்துக்குடி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற இருக்கும் நிலையில் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ரேஷன் கார்டு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு சென்னையிலும் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் முகாம் நடைபெற உள்ளது.
மேலும் இந்த சிறப்பு முகாமின் போது பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் கைபேசி எண் மாற்றுதல், அங்கீகாரச் சான்று பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.