
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் எல்லையில் தமிழக போலீசாரை உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடப்பாரையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வழியாக வந்த சுற்றுலா பேருந்தில் ஓட்டுநரிடம் அங்கிருந்த போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் வானில் இருந்த சுற்றுலா பயணிகள் போலீசாரை கடப்பாரையை கொண்டு கொடூரமாக தாக்கினர். அவருடைய சட்டையை கிழித்து அவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் உடனடியாக அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி போலீசாரை மீட்டனர். இந்த சம்பவத்தில் 4 போலீசார் காயம் அடைந்த நிலையில் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் போலீசாருக்கு உதவியாக திரண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக போலீசாரை இரும்பு கம்பி, கட்டையால் தாக்கிய உத்தரபிரதேச சுற்றுலாப்பயணிகள்… தமிழக போலீசாருக்கு ஆதரவாக சுற்றுலாப்பயணிகளை தாக்கி சிறைபிடித்த உள்ளூர் மக்கள்.. தமிழக எல்லையில் பரபரப்பு.!#Salem | #Touristers | #TNPolice | #UttarPradesh | #Attack 🤦🤦🤦🤦 pic.twitter.com/I7mNIOf11g
— Political News🔥 (@Mahi1987Mass) December 27, 2024