தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசியல் சார்பில் தமிழகம் முழுவதும் 4820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக் மதுக்கடையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 500 கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்து அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.