தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் அக்டோபர் 21, 22 சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக 21, 22 ஆகிய தேதிகளில் திருச்சி, நெல்லை, மதுரை, திருச்சி,தஞ்சை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.