
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மதியம் ஒரு மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலையில இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தென்காசி, நெல்லை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, குமரி, திருவள்ளூர், சென்னை ,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.