வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜனவரி 28,29,30 ஆகிய மூன்று தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், மீண்டும் மழை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.