தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 37,866 பள்ளிகளில் 22.27 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவதாகவும், ஆங்கிலம் வாசிப்பதை அதிகரிக்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.