தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு எழுதுகின்றனர். இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும், 11,12 ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்துவதால் மாணவர்கள் தொடர்ந்து மூன்று பொது தேர்வு எழுதுவதில் சோர்வு அடைவதால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.