
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.14 கோடி மகளிர்க்கு மாதந்தோறும் 15ஆம் தேதி 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் பொருட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் தகுதி வாய்ந்த மகளிர்கள் மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து சுமார் 15,000 பெண்களை நீக்குவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
அதன்பிறகு இறந்த பயனாளிகள், அரசு வேலைகளில் சேருபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இதனால் இந்த குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப தலைவிகளின் பெயர் நீக்கப்படும்.
சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத்துறை தேர்வுகளில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர இருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்களின் பெயர்களையும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்திருந்தால் நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது ரேஷன் கார்டில் இருக்கும் பெயர்களில் யாராவது ஒருவர் அரசு வேலையில் இருந்தால் கண்டிப்பாக அந்த ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப தலைவிக்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அதன் அடிப்படையில் தான் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட இருக்கிறது.
மேலும் திருமணம் ஆகாத ஒரு பெண் அரசு வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சரி திருமணம் ஆன பெண் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த மகளிர் உரிமை தொகையை பெற முடியாது.
எனவே 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட இருப்பதாகவும் விரைவில் அவர்களின் பெயர்கள் வெளியாகும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.