டாஸ்மாக் கடைகளில் சரக்கு, பீர் விலை பிப்.1 முதல் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோல, அனைத்து பீர் வகைகளும் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.