நீலகிரியில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தை  அம்மன் கோவில் திருவிழாவானது நாளை கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். இத்தனை சிறப்பு மிக்க இந்த விழாவானது வரும் டிசம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

இதன் காரணமாக மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்குள்ள பள்ளி ,கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக 2024 ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.