
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் எண்களை பதிவு செய்யலாம் மற்றும் ஆதார் எண்களை புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.