தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது கேன் தண்ணீரை குடித்து வருகின்றனர்.

ஒரு சில நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பனை செய்வதாக புகார் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தரமாக உள்ளதா என்று கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்பானங்களை சோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.