தமிழகத்தில் நடைபாண்டுக்குள் 75 சதவீதம் பேருக்கு 5G சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கேரளாவில் அரசே வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டமான கேஃபோன் (KFON) போன்று தமிழகத்திலும் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.