
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தென்காசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் காமராஜர் பள்ளி என்ற பெயரில் திறக்கப்படும். அதன் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் பாஜக மகளிர் உரிமை தொகை வழங்கும் என்று கூறினார்.
ஏற்கனவே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மகளிர் உரிமைத்தொகை அதிகமாக வழங்கப்படும் நிலையில் சமீபத்தில் டெல்லியில் கூட 2500 ரூபாய் மகளிர் பெண்களுக்கு வழங்கப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து பேசிய அண்ணாமலை தமிழக குழந்தைகளின் ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். அதனால்தான் பாஜக தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கம் 12 லட்சத்தை தாண்டி செல்கிறது. தமிழகத்தில் ரூ.9.5 கோடிக்கும் அதிகமாக கடன் இருக்கிறது.
மது விற்பனை இல்லாத குஜராத் நிதி பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் மது விற்பனையில் ஈடுபடும் தமிழக அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. குழந்தைகளின் தலையில் கடன் சுமை சுமத்தப்படுகிறது. தமிழகத்தின் கல்வித்தரத்தை திமுக அரசு குறைக்கும் நிலையில் கல்வி கற்றவர்கள் மட்டும் தான் நாட்டை ஆள வேண்டும். இதுதான் பாஜகவின் கொள்கை. ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் மது விற்பனை மூலம் மட்டுமே கிடைக்கிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் வகையில் ஓட்டு போட வேண்டும் என்று கூறினார்.