
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் பள்ளிகள் நடைபெறும் என அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை.
இதைத்தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமையும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்திற்கும் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.