
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி என்பது நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறிப்பாக காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். மேலும் தமிழகத்தில் வருகிற 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.