
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது வருட 12 ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறையில் உள்ளது. பின்னர் இது தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 11-ல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதன்படி இன்று கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.