ஒரு காலத்தில் இயக்குநர் மகேஷ் பட் மற்றும் அவரது மகள் பூஜா பட் முத்தமிடும் புகைப்படம் பெரும் சர்ச்சையானது. தந்தையும் மகளும் முத்தமிட்டதற்கு பிறகு, பூஜா தனது மகள் இல்லையென்றால் திருமணம் செய்திருப்பேன் என்று மகேஷ் பட் ஒரு பேட்டியில் கூறியதும் கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இரண்டு தசாப்தங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் குறித்து பூஜா பட் தற்போது பதிலளித்துள்ளார்.

“பெற்றோருக்கு, அவர்களின் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருப்பார்கள். சில நேரங்களில் காதல் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. கெட்ட எண்ணம் கொண்டவர்கள் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பை மோசமாக சித்தரிக்கின்றனர்” என கூறினார்.