உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 65 வயது தாத்தாவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ₹20,000 அபராதமும் சுல்தான்பூர் மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. சிறப்பு நீதிபதி நீரஜ் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடந்தது. சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றிருந்தார். தாய் வீட்டில் இருந்தார். அப்போது சிறுமியின் தாத்தா வீட்டிற்கு வந்து, தண்ணீர் கேட்பதுபோல சிறுமியை காட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் போலீசார் விரைவாக விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சுல்தான்பூர் போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கை 16 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.