தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு மன உளைச்சலில் இருந்தார். நேற்று அந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக அருகே இருக்கும் தண்டவாள  பகுதிக்கு சென்றார்.

இதனை பார்த்ததும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி இரண்டாவது நகர காவல் நிலைய தலைமை காவலர் நாகராஜ், கான்ஸ்டபிள் தனஞ்ஜெயா ஆகியோர் தண்டவாளத்திற்கு விரைந்து சென்று அந்த இளம் பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

அடுத்த நொடியே ஜன்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பகுதியை கடந்து சென்றது. போலீசார் விரைந்து செயல்பட்டு இளம் பெண்ணை மீட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அறிவுரை கூறி இளம் பெண்ணை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இளம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.