லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு நயன்தாரா முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் சசிகாந்த் இயக்கத்தில் சித்தார்த், மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் திரைப்படத்தை நடித்து இருக்கிறார். இந்த படம் தன்னை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பி உள்ளார். மேலும் யோகி பாபுவோடு மண்ணாகட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நயன்தாராவிற்கு கைக்குழந்தைகள் இருப்பதால் அவுட்டோர் படப்பிடிப்பிற்கு வர முடியாது என்றும் சென்னையில் ஊட்டி செட்டை அமைக்க வேண்டும் என்று கூறிதாகவும் தகவல் வந்தது . இதைக் கேட்ட பலரும் நயன்தாராவை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் மண்ணாங்கட்டி திரைப்படத்தில் ஊட்டியில் காட்டை கொளுத்துவது போன்று ஒரு காட்சி இடம் பெருமான். எனவே நிஜ காட்டை கொளுதினால் அது பலருக்கு தீங்காய் இருக்கும் என்பதற்காக தான் அந்த ஊட்டி காட்டை செட் அமைக்க சொல்லியுள்ளார் நயன்தாரா. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இது தெரியாமல் நயன்தாராவை திட்டி விட்டோமே என்று கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்கள்.