
மகாராஷ்டிராவின் தானேவில் நியூ ஹாரிசான் பள்ளிக்கு அருகில், பள்ளி சீருடையில் ஒரு சிறுவன் மஹிந்திரா XUV700 காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் ஓட்டி சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவத்தில் 12-13 வயதான மாணவர்கள் காரில் பயணம் செய்ததோடு, சிலர் சன் ரூஃப்-ல் நின்று கொண்டும் ரசித்துள்ளனர். இந்த பொறுப்பற்ற நடவடிக்கை சாலை பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களை எழுப்பியதோடு, பெற்றோர்கள் கண்காணிக்காதது என்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ, 23 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து,வாகன உரிமையாளரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர், வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், சாலை விதிகளை மீறிய குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram