கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் கார் வெடித்ததில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ये हादसा बेहद दुखद है। सभी जांच एजेंसियां अपना काम कर रही हैं और पूरी तरीके से इसकी तह तक जाने का काम चल रहा है। हम लोग स्वयं अस्पताल जाकर घायलों से मिले। सरकार का पूरा सहयोग उनके साथ है। pic.twitter.com/VJV8N9Hpfb
— Rekha Gupta (@gupta_rekha) November 11, 2025
“>
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “டெல்லியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் முழு நகரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு ₹5 லட்சம் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்த அனைவருக்கும் உரிய தரமான மருத்துவ சிகிச்சையை அரசே உறுதி செய்யும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
