
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் உள்ள வண்டிப்பெரியார் பகுதியில் ஒரு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண் காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தார். அதாவது கழிவறை செல்வதற்காகவும் உடை மாற்றுவதற்காகவும் அந்த பெண் போலீஸ் அங்கு சென்ற நிலையில் அந்த பாத்ரூமில் நான்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த கேமராக்கள் மூலம் அந்த பெண் ரகசியமாக உடை மாற்றுவதையும் கழிவறை செல்வதையும் வீடியோ எடுத்துள்ளனர். இதேபோன்று பல பெண் போலீசாரை வீடியோ எடுத்து ஒருவர் மிரட்டி வந்துள்ளார். அதாவது தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அவர்களை மிரட்டி வந்த நிலையில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கொடுத்த கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் தான் ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
அவரின் பெயர் வைசாக் (40). இவர் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு பெண் போலீசாரை மிரட்டி வந்த நிலையில் தற்போது அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் உடைய மாற்றுவது ஏழு மாதங்களாக தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து பார்த்துள்ளார்.
மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.