மும்பையில் உள்ள லோக்கல் ரயிலில் பயணி ஒருவர் செய்த வன்முறை சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு பயணி மும்பை லோக்கல் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிதுள்ளார். அவர் நார்மல் டிக்கெட் எடுத்து கொண்டு ac கோச்சில் எறியதாக கூறப்படுகிறது. டிக்கெட் சோதனையின் போது அந்த பயணி திடீரென்று பரிசோதகரிடம் இது தொடர்பாக தகராறு நடந்துள்ளது . பின்னர் அவர் டிக்கெட் சோதனையாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் டிக்கெட் சோதனையாளர் பணத்தை கீழே தவற விட்டுள்ளார்.

இந்த சம்பவம் ரயிலில் பயணித்த மற்றவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் வந்து அந்த நபரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டதால் அவரை விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில் டிக்கெட் சோதனையை தடுப்பது குற்றமாகும். இதற்கு ஆறு மாத சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“>