டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ் வரவுள்ளது. அதாவது மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் என 24 ஆயிரம் பேர் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் நிலையில் கூடுதல் விலையில் மதுபானங்களை விற்பனை செய்ததாக தொடர்ச்சியாக புகார் இருந்தது. அதனை சரி செய்யும் விதமாக ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.