டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளாக நடக்கும் இந்த செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த தொடரில் நேற்று ஏழாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ் – பிரக்ஞானந்தா மோதிக்கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 33வது காய் நகர்தலுக்கு பிறகு விளையாட்டு டிராவில் முடிந்தது. இதனால் இருவருக்கும் 0.5 புள்ளிகள் கிடைத்தது.