ஞாயிற்றுக்கிழமையன்று தெற்கு கோவாவில் பாஞ்சஜன்ய வரா பத்ரிகா ஏற்பாடு செய்திருந்த ‘சாகர் மந்தன் 2.0’ என்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 வைரஸ் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நாடு கடந்த காலங்களில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடியுள்ளதாகவும், புதிய மாறுபாடு குறித்து மக்களும் சுற்றுலாத் துறையினரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.