ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் மவுன சாமியாராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதை விமர்சித்துள்ள அவர், 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஒரே ஒரு சீட்டு பெற போராடுகிறார். தற்போது ஓபிஎஸ்க்கு ஏற்பட்ட நிலை முன்னாள் முதல்வர்கள் யாருக்கும் ஏற்படவில்லை என உதயகுமார் தெரிவித்தார்.