தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கும் நிலையில், திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

அங்கு கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கடும் குளிரால் அவதிப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது காஷ்மீரில் குளிர் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பை மே மாதத்திற்குள் முடிக்குமாறு தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளாராம். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடிகர் விஜய் ஜெட் வேகத்தில் நடித்து வருவதால் அவருடைய வேகத்திற்கு ஈடாக மற்ற கலைஞர்களும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தன்னுடைய படங்களின் வேலையை விரைவாக முடிப்பார் என்பதால் லியோ படத்தின் பணிகளையும் நடிகர் விஜய் சொன்னபடி விரைந்து முடிப்பார் என்று கூறப்படுகிறது.