பொதுவாக ஜிமெயிலில் பெரும்பாலான நபர்கள் தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பார்கள். ஏனெனில் சில அவசர தேவைக்காக இவ்வாறு வைத்திருப்பது பொதுவான விஷயம் தான். ஒரு சிலர் மின்னஞ்சலில் அதை பயன்படுத்திவிட்டு மறந்துவிடலாம். ஆனால் அந்த விஷயங்கள் தொடர்பான gmail கணக்கு உயிர்போடு இருக்குமாம். எனவே தேவையில்லாத விஷயங்களுக்கு இமெயில் கணக்கை கொடுத்திருந்தால் அதை உடனடியாக நீக்குவது நல்லது. அது எப்படி நீக்கலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் gmail கணக்கில் உள்ளே சென்று ப்ரோபைல்-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில்   Manage your Google Account என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு செக்யூரிட்டி பகுதியை தேர்வு செய்து Your connections to third-party apps தேர்வு செய்யவும். அங்கு உங்களுடைய கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில்  தேவையற்ற அணுகல்களை தேர்வு செய்து டெலிட் செய்து விட வேண்டும்.

இவ்வாறு செய்துவிட்டால் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக இருப்பதுடன் தேவையற்ற  தகவல்களை அணுக முடியாது. தேவையற்ற ஈமெயில்கள் மற்றும் Spam குறைவதுடன் சைபர் குற்றவாளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கலாம். எனவே ஜிமெயில் வைத்திருப்பவர்கள் இதை செய்து விடுவது மிக சிறந்தது.