சுற்றுலா போகும்போது அங்கு பார்க்கும் அனைத்தையும் வீடியோவாக எடுப்பார்கள். இந்த நிலையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற ஒரு ஜோடி வீடியோ எடுத்து யூட்யூபில் பதிவிட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் சுற்றுலா செல்லும்போது அந்த ஊரில் இருக்கும் விதிகளை நாம் பின்பற்ற வேண்டியது கட்டாயம். அந்த வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு குடும்பத்துடன் சென்ற ஒருவர் ஜாலியாக அணைத்து இடங்களையும் சுற்றி பார்த்துள்ளார்.

அதன் பிறகு யூடியூப் பக்கத்தில் சுற்றுலா சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜாரவா பழங்குடியின மக்கள் தொடர்பான காட்சிகள் இருக்கும். அதனை பார்த்த அந்தமான அதிகாரிகள் யூடியூப் சேனல் மீது வழக்கு பதிந்துள்ளனர். அந்த பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட சமூகமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக படம் பிடித்து யூட்யூபில் பதிவேற்றியதற்காக அந்த சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ நீக்கப்பட்டது.

விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியானது. கடந்த 2023-ஆம் ஆண்டு பிரபல டியூபர் சஞ்சய் குமார் சுவாமி அந்தமான் சென்றபோது ஜாராவா பழங்குடியின மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வீடியோ வெளியிட்டார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அந்தமானை பொறுத்தவரை ஜாரவா பழங்குடியினரின் வீடியோ எடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். ஆனால் சுற்றுலா பயணிகள் அப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கி கொள்கின்றனர்.